தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அரசு பேருந்து எரிப்புச் சம்பவம்: 3 பேரிடம் விசாரணை

காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் அரசு பேருந்து ஒன்று கம்பிக்குடிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத  நேரத்தில் மர்ம் கும்பல் பேருந்தின் மீது பெட்ரோல்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே காரியாபட்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து எரிப்புச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

காரியாபட்டி பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் அரசு பேருந்து ஒன்று கம்பிக்குடிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத  நேரத்தில் மர்ம் கும்பல் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்களாம்.அதில், பேருந்தின் பின்புறம் தீப்பிடித்து மளமள பரவி எரியத் தொடங்கியது. இது தொடர்பாக அப்பேருந்தின் ஓட்டுநர் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து வழக்கு பதிவு தலைமறைவான மர்ம நபர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த குருசாமி, கண்ணன், சுரேஷ் ஆகியோரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து அரசு பேருந்து எரிப்புச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT