விராலிமலை அருகே ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவாசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவாசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது.
நாங்குபட்டியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு விவசாயி. இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று வியாழக்கிழமை இரண்டு ஆண் கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு கன்றுகளும் நல்ல நிலையில் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் நாங்குப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.