முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது வழக்குப்பதிவு

காட்டுமன்னார்கோயில் அருகே போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது குமராட்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே போலி பிறப்பு சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற இருவர் மீது குமராட்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த பசுருதீன் மகன் இப்ராஹீம், மெய்யாத்தூரைச் சேர்ந்த அப்துல்மஜீத் மகள் ஆயிஷாபீவி ஆகிய இருவரும் போலி பிறப்புச்சான்றிதழ் கொடுத்து பாஸ்போர்ட்டு பெற்று வெளிநாடு சென்றதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குமராட்சி போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.