தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி சாவு 

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவேல்பாண்டி(42). இவர் குடிப்பழக்கம் உடையவாராம். இந்நிலையில் தனது மனைவி பாக்கியத்துடன் திங்கள்கிழமை இரவு விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றார். அங்கு திருவிழாவை பார்த்து விட்டு இரவில் மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, அப்பகுதியில் மதுக்குடிப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால், அதைத் தொடர்ந்து வடமலைக்குறிச்சி மாலையம்மன் கோயில் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாராம். இது தொடர்பாக அவரது மனைவி பாக்கியம் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததால் உயிரிழந்தாரா அல்லது விஷம் கலந்து குடித்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT