புதுச்சேரியில் முழு அடைப்பு: 5 பேருந்துகள் மீது கல்வீச்சு
ஆந்திர மாநிலத்தில் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுவையில் சமூக நல கூட்டமைப்பினர் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, புதுவையில் சமூக நல கூட்டமைப்பினர் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
இதற்கு பல்வேறு அமைப்புகள், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் முற்றிலும் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் புதுச்சேரியில் 5 பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தன.