தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிராக நெல்லையில் நூதனப் போராட்டம்
திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிராக திருநெல்வேலியில் இந்து மகா சபா சார்பில் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிராக திருநெல்வேலியில் இந்து மகா சபா சார்பில் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி நயினார் குளத்தின் கரையில், பெண் வேடமணிந்த நபரும், கறுப்புச்சட்டை அணிந்த நபரும் இறுதிச் சடங்கு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபடமுயன்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி இந்து மகாசபா மாவட்டத் தலைவர் எஸ். மணி, மண்டலத்தலைவர் ராஜா, மாவட்ட அமைப்புச் செயலர் முருகேசன், தாலுகா செயலர் கோபால் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.