முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு வெள்ளி பல்லக்கு உபயம்: கோவை பக்தர் வழங்கினார்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.9 லட்சம் செலவிலான 21 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வெள்ளி பல்லக்கை உபயமாக செவ்வாய்க்கிழமை

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.9 லட்சம் செலவிலான 21 கிலோ வெள்ளியில் செய்யப்பட்ட வெள்ளி பல்லக்கை உபயமாக செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு பள்ளியறை பாதுகை கொண்டு செல்லும் வகையில் ரூ.9 லட்சம் செலவில் 21 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வெள்ளிப் பாதுகையை கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிற்சாலைகள் உரிமையாளர் சங்கத் தலைவர் ரவிஷ்யாம் செய்துள்ளார். இவர் வெள்ளிப் பாதுகையை தனது கட்டளை தீட்சிதர் டி.சுப்பிரமணிய தீட்சிதர் மூலம் செவ்வாய்க்கிழமை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஸர்பேஸ்வர தீட்சிதர், கும்பாபிஷேக கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா தீட்சிதர் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.