விருதுநகர் அருகே உரக்கழிவுகள் கலந்த புல்லை மேய்ந்த 29 ஆடுகள் சாவு
விருதுநகர் அருகே உரக்கழிவுகள் கலந்த புல்களை மேய்ந்த 29 வெள்ள ஆடுகள் வியாழக்கிழமை திடீரென உயிரிழந்தன.
விருதுநகர் அருகே உரக்கழிவுகள் கலந்த புல்களை மேய்ந்த 29 வெள்ள ஆடுகள் வியாழக்கிழமை திடீரென உயிரிழந்தன.
விருதுநகர் அருகே டான்பெட் உர நிறுவன வளாகத்தில் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆடுகளை மேய்ப்பது வழக்கமாகும். அதேபோல், இப்பகுதியில் டான்பெட் உர நிறுவன வளாகத்தில் உள்ள புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் அப்பகுதியைச் சுற்றிலும் திடீரென மயங்கி விழுந்தும் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆடுகள் உயிரிழந்தன. இதில், விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குருவு, சுப்பையன், குருசாமி, ஜெயசங்கர் மற்றும் புஷ்பம் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 29 வெள்ள ஆடுகள் உயிரிழந்தன.
Advertisement
இது குறித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், லாரிகளில் பல்வேறு வகையான உரமூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அதை பாதுகாப்பாக கூட்டுறவு விவசாய வங்கிகளுக்கும் அனுப்பியும் வருகின்றனர். இதில், லாரியில் ஏற்றி இறக்கும் போது உரக்கழிவுகள் சிந்துவதை அப்படியே புல்வெளியில் சிறு, சிறு பகுதியாக குவித்து வைத்து விடுகின்றனர். இதையடுத்து, சாரல் மழையில் கரைந்த நிலையில் இருக்கும் புற்களை மேய்ந்ததால் விஷமாகி உயிரிந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.