தா.மா.க மாவட்ட மேலிட பார்வையாளர்கள் நியமனம்
விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:56 AM
விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மேலிட பார்வையாளர்களாக முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.உடையப்பன், மாநில செயற்குழு உறுப்பினரும், பள்ளப்பட்டி ஊராட்சி தலைவருமான ஏ.ராஜாபாண்டியன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.