விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி
விருதுநகர் கட்டாரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை மருந்து ஒதுக்கி வைத்திருந்த அறையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:56 AM
விருதுநகர் கட்டாரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை மருந்து ஒதுக்கி வைத்திருந்த அறையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.
இதில் முத்துலிங்காபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் (30) என்பவர் பலியானார். அதே ஊரைச் சேர்ந்த பெத்துராஜ் (40) என்பவர் படுகாயம் அடைந்தார். இவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வத்தகாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.