முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சுழி அருகே ஆட்டோ கவிழந்து பெண் சாவு

திருச்சுழி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 19 ஆகஸ்ட், 2015 at 5:15 PM
பகிர்:

திருச்சுழி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சுழி அருகே கல்லங்குடியைச் சேர்ந்த சோலைமலையின் ராஜாத்தி(46). இவர் செவ்வாய்கிழமை மாலையில் வீரசோழன் கிராமத்தில் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்தக் கிராமத்திற்கு செல்ல ஆட்டோவில் ஏறி சென்றாராம். அப்போது, சாலை வளைவில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக கவிழந்து விபத்துக்குள்ளானதில் ராஜாத்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது விபத்து குறித்து அவரது கணவர் சோலமலை திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மீன்வளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.