விருதுநகர் அருகேஅனுமதியின்றி கருந்திரி தயாரித்த 2 பேர் கைது: 7900 கட்டுக்கள் பறிமுதல்
விருதுநகர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் தயார் செய்த 3 பேரை ஆமத்தூர் போலீஸார் பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்து 7900 கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் தயார் செய்த 3 பேரை ஆமத்தூர் போலீஸார் பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்து 7900 கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி மற்றும் வெள்ளைத்திரிகளை தயார் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை திடீர் ரெய்டு மேற்கொண்டனர். அதில், ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ரவிசந்திரன்(51) என்பவர் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு கருந்திரிகள் கட்டுக்களாக தயார் செய்து வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
மேலும், அப்பணியில் அதே பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன்(51) மற்றும் சதாசிவம்(47) ஆகியோரும் ஈடுப்பட்டிருந்தனர். இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த 6500 வெள்ளைத்திரி மற்றும் 1400 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்து காட்டுப்பகுதியில் அழிப்பதற்காக வேனில் ஏற்றிச் சென்றனர். எனவே பறிமுதல் செய்த கருந்திரி கட்டுக்களின் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.