புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அவ்வைத்திடல் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை அவ்வைத்திடல் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மத்திய அரசிடம் இருந்து பெற்ற கடன் தொகை ரூ.6 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் ரவி சீனிவாசன், நிர்வாகிகள் மணிமாறன், ரவீந்திரன், சந்துரு, கணேசன் உள்ளிடடோர் பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்னர். புதுவை பொறுப்பாளர் சோம்நாத் பாரதி எம்.எல்.ஏ. நிறைவுரை ஆற்றினார்.