முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூரில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை: 30 கிராம் செயின் திருட்டு

கடையநல்லூர் அருகே புன்னய்யாபுரம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி 30 கிராம் தங்கம் செயினை மர்ம நபர்கள் கைவரிசையை நிகழ்த்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:47 AM
பகிர்:

கடையநல்லூர் அருகே புன்னய்யாபுரம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி 30 கிராம் தங்கம் செயினை மர்ம நபர்கள் கைவரிசையை நிகழ்த்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று, காலை முத்துலட்சுமி என்பவர் புன்னய்யாபுரம் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தர். அப்போது எதிர்பாராதவிதமாக ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 30 கிராம் தங்க செயினை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து, எதிரே வந்த கார் மீது மோதி இருசக்கர வாகனம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி கத்தியை காட்டி கொள்ளையர்கள் அதில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து, புன்னய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →