1500 குடும்பங்களுக்கு மழை நிவாரண உதவி
புதுவை ஸ்ரீ மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு புதன்கிழமை மழைநிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
புதுவை ஸ்ரீ மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு புதன்கிழமை மழைநிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
புதுவை அடுத்த காரணப்பட்டு, செல்லஞ்சேரி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டுச்சாவடி, விநாயகபுரம், குமரப்பச்சாவடி, புதுக்காலனி, தனிக்குப்பம், கம்பளிக்காரன் குப்பம், மணவெளி, சந்தைவெளி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
மொத்தம் 1500 குடும்பங்களுக்கு கல்லூரி தலைவர் எம்.தனசேகரன் நிவாரணப்பொருள்களை வழங்கினார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி, முதல்வர் கே.வெங்கடாசலபதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.