விருதுநகர் அருகே 3 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை கடத்தியதாக 2 பேர் கைது : வாகனம் பறிமுதல்
விருதுநகர் அருகே 3 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை வாகனத்தில் கடத்திச் சென்றதாக 2 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே 3 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை வாகனத்தில் கடத்திச் சென்றதாக 2 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் - மாத்தநாயக்கன்பட்டி சாலை வழியாக வாகனங்களில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலையில் சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் போலீஸார்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சூலக்கரை-மாத்தநாயக்கன்பட்டி சாலையில் வந்த வாகனம் போலீஸாரை பார்த்ததும் திடீரென திரும்பி செல்ல முயன்றனர். அதற்குள், பின்தொடர்ந்து சென்ற போலீஸார் சுற்றி வளைத்து வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்குகளில் வெள்ளைத்தாள் சுற்றிய நிலையில் 3000 கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு ரூ.60ஆயிரம் ஆகும்.
Advertisement
அதையடுத்து, அந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் உள்ள கட்டனம்செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி(50), நாராயணசாமி(55) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு கைது செய்தனர். அதையடுத்து, கருந்திரி கட்டுக்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.