தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் : ஆண்களை விட பெண்களே அதிகம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சா. ஜெயப்பிரகாஷ்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி, மாலை 5 மணி நிலவரப்படி, 76.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 2,70,000 வாக்காளர்களில் இதுவரை 2,07,821 பேர் வாக்களித்துள்ளனர்.

இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அதாவது, ஆண்கள் - 1,01,088 பேரும், பெண் வாக்காளர்கள் 1,06,727 பேரும், திருநங்கைகள் - 6 பேரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒரு வாக்குச்சாவடியை  தவிர அனைத்து இடங்களிலும் தடையின்றி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16ம் தேதி நடக்க உள்ளது.

மேலும் விவரமாக...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT