முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலை. உதவிப்பேராசிரியர் மீது வழக்குப் பதிவு

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஒருவர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக தமிழகஅரசு ஏற்று நடத்தி வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள அரசு முதன்மைச் செயலரான ஷிவ்தாஸ்மீனா பல்வேறு நீர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு விதிப்படி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்கள்
உண்மைத்தன்மை கண்டறியும் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியராக பணியாற்றுபவர் சுப்பிரமணியன் (35). விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இவர் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலியாக கொடுத்து பணியில் சேர்ந்ததாக பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் உதவிப் பேராசிரியர் சுப்பிரமணியன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.