முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை. சார்பில் 1 லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு, மருத்துவத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை. சார்பில் 1 லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு, மருத்துவத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு லட்சம் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு, மருத்துவத் துறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இந் நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் மாணவ மாணவியர் சுகாதாரத் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தினர்.

மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை இலவசமாக அச்சிட்டு சுகாதாரத் துறைக்கு வழங்க வேந்தர் க.ஸ்ரீதரன் மற்றும் வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளி கிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
இதன் பேரில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வேந்தர் சார்பில்
பேராசிரியர்கள் ராமசாமி, எம்.ஜெயக்குமரன் ஆகியோர் சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் சம்பத்திடம் ஒப்படைத்தனர்.

பல்கலைக்கழகத்தின் சேவையை, சுகாதாரத் துறை சார்பில் டாக்டர் சம்பத் வெகுவாக பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →