எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அடுத்துள்ள ஆணைப்பட்டியைச் சேர்ந்தவர் புலியூர் முருகேசன். இவர் தற்போது கரூர் அருகே உள்ள புலியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எல்ஐசி ஏஜெண்டான
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளப்பாறை அடுத்துள்ள ஆணைப்பட்டியைச் சேர்ந்தவர் புலியூர் முருகேசன். இவர் தற்போது கரூர் அருகே உள்ள புலியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எல்ஐசி ஏஜெண்டான இவர் சிறு நாவல் புத்தகங்களை எழுதி வருகிறார். இவர் தான் எழுதிய புத்தகமான பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்ற சிறுகதை புத்தகத்தை கடந்த 28.12.2014-ல் கரூரில் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் என்ற தலைப்பில், திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்துக்கொண்டு எழுதியுள்ளார். இதனால் அந்த சமுதாயத்தினர் நூலை தடை செய்ய வேண்டும், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வியாழக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் 5 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதனால் முருகேசன் நூல் ஆபாசமாக இருத்தல்(292), புத்தகத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துதல் (153),எழுத்துக்கள் கலவரத்தை உருவாக்குதல் (504, 505) ஆகிய பிரிவுகளின் மேல் முருகேசன் மீது பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து வசாரித்து வருகின்றனர்.
Advertisement