முகப்பு
தற்போதைய செய்திகள்

இளம் பெண்ணைக் காணவில்லை: தந்தை போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா நாடார் மகன் ஜான்கென்னடி (51). இவரது மகள் அனிதா மேரி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர்

தற்போதைய செய்திகள்

இளம் பெண்ணைக் காணவில்லை: தந்தை போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா நாடார் மகன் ஜான்கென்னடி (51). இவரது மகள் அனிதா மேரி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் தனியே இருந்த தனது மகளைக் காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா நாடார் மகன் ஜான்கென்னடி (51). இவரது மகள் அனிதா மேரி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோ.புதூர், அந்தோணிசாமி மகன் சாமிநாதன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இருவரும் கோயமுத்தூர் அருகேயுள்ள அன்னூரில் குடியிருந்து வந்துள்ளனர். சாமிநாதன் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை சரியில்லை என்று கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அயன்நத்தம்பட்டி வந்து, ஜான்கென்னடி வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள்.புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனைக்கு அனிதா மேரியை வீட்டில் விட்டுவிட்டு, ஜான்கென்னடி குடும்பத்துடன் சென்றுள்ளார். திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகளைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததையடுத்து, ஜான்கென்னடி நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனிதா மேரியை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →