முகப்பு
தற்போதைய செய்திகள்

எண்ணெய்காப்பு உற்சவத்தையொட்டி ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ஸ்ரீவில்லிபுத்தூர்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் ஜனவரி 8 (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி, புதன்கிழமை இரவு

தற்போதைய செய்திகள்

எண்ணெய்காப்பு உற்சவத்தையொட்டி ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ஸ்ரீவில்லிபுத்தூர்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் ஜனவரி 8 (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி, புதன்கிழமை இரவு

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ஸ்ரீவில்லிபுத்தூர்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் ஜனவரி 8 (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி, புதன்கிழமை இரவு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட (எண்ணெய்காப்பு) உற்சவம் வியாழக்கிழமை தொடங்கி இம் மாதம் 15-ம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெறுகிறது.இதனையொட்டி, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவடபத்ரசயனரிடம் நோன்பு இருக்க அனுமதி கேட்கும் (பிரியாவிடை) நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்காக ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, மாடவீதி வழியே பெரிய பெருமாள் சன்னதியை வந்தடைந்தார். ஸ்ரீபெரிய பெருமாள் சன்னதியில் ஸ்ரீஆண்டாள் ஏகாந்தத் திருமஞ்சனம், ஸ்ரீஆண்டாள் கைத்தல சேவை முடிந்து ஸ்ரீபெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்று, திருவாராதனம், திருகாப்பு நீக்கல் நடைபெற்றது.

அரையர் வியாக்கியானம், திருப்பாவை 1-ம் பாட்டு மற்ற பாட்டுகளும் சேவித்தல் நடைபெற்றது. ஸ்தலத்தார் உற்சவ வைபவம் வாசித்தல், பஞ்சாங்கம் வாசித்தல், பொதுஜன சேவை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேருதல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.     

முழு கட்டுரையைப் படிக்க →