முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்து பிளஸ் 1 மாணவி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நித்தியானந்தன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களது மகள் சித்ரா (16). ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்து பிளஸ் 1 மாணவி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நித்தியானந்தன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களது மகள் சித்ரா (16). ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவி ஸ்டவ் வெடித்து தீக்காயமுற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நித்தியானந்தன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களது மகள் சித்ரா (16). ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.புத்தாண்டு அன்று புத்தாடை அணிந்து வீட்டில் சமையல் செய்தாராம். அப்போது ஸ்டவ் வெடித்ததில் புடவையில் தீப்பற்றியதாம். இதில் தீக்காயமுற்று, சிவகாசி அரசு மருத்துமனையில் தீவிர தீக்காய சிகிச்சைப் பிரிவில் சித்ரா சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தாய் கிருஷ்ணவேணி கொடுத்து புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →