முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி பத்திரம் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், தாட்கோட்டை தாலுகா, கோட்டையூர், எழில்நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கமலம் (66).இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சொக்கலாம்பட்டியைச் சேர்ந்த வே.

தற்போதைய செய்திகள்

போலி பத்திரம் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், தாட்கோட்டை தாலுகா, கோட்டையூர், எழில்நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கமலம் (66).இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சொக்கலாம்பட்டியைச் சேர்ந்த வே.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பத்திரம் தயாரித்து ரூ.6 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், தாட்கோட்டை தாலுகா, கோட்டையூர், எழில்நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி கமலம் (66).இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சொக்கலாம்பட்டியைச் சேர்ந்த வே.கருப்பசாமி (46), மணிகண்டன் ஆகியோர், விழுப்பனூர் கிராமத்தில் உள்ள 13.86 சென்ட இடம் தங்களுடையது என்று கூறி, 4.9.13 மற்றும் 14.12.13 ஆகிய தேதிகளில் கிரையம் பேசி ஒப்பந்தம்போட்டு, ரூ.6 லட்சம் பெற்றுள்ளார்கள்.

விசாரித்ததில், இடம் குறிப்பிட்ட இருவர் பெயருக்கு இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து கமலம், பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் கருப்பசாமியும், மணிகண்டனும் போலியாக பத்திரம் தயாரித்து, கமலத்தை மிரட்டி, ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்தார்களாம்.இது குறித்து கமலம், மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதன் பேரில் போலீஸார் கருப்பசாமி மற்றும் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →