தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 26-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்தியும், அதில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தான முழு

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 26-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்தியும், அதில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தான முழு விவரங்களையும் தெரிவிக்கவும் வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தி அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க வேண்டும். இக்கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் நடத்தப்பட வேண்டும். இதில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர்-2014 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவின விவரம் குறித்து விவாதிக்க வேண்டும்.

அதேபோல், நிகழாண்டில் கிராமத்தில் மேற்கொள்ள இருக்கிற பணி விவரங்கள், நலத்திட்டங்கள் குறித்து முழு விவரங்களையும் விளக்கமாக எடுத்துரைத்து கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதேபோல், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பசுமை குடியிருப்பு திட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயணாளிகளின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

மேலும், முக்கியமாக அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், கொசுக்கள் மூலம் பரவும் சுகாதார கேடுகளுக்கான தடுப்பு நடவடிக்கை, சுகாதார வளாகம் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் உபயோகம், இறைச்சிக் கடைகளை ஒழுங்குப்படுத்துதல், தெருக்களில் சூரிய சக்தி விளக்குகளை பராமரித்தல், புகையிலை பயன்பாட்டை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு, ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் வரவு செலவு குறித்து விவாதித்தல், மகளிர் திட்டம் அடிப்படை தகவல் சேகரித்தல், பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்புத் திட்டம், ஊராட்சிக்கான  தணிக்கை மற்றும் பொதுமக்கள் தொடர்பான திட்டங்கள் ஆகியவைகள் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

அதனால், இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், தேவையான திட்டங்கள் குறித்து தெரிவித்து பயனடையுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT