ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொறியியல் மாணவி கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரம், யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களின் மகள் தீபிகா (23). கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஒரு
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொறியியல் மாணவி கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரம், யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களின் மகள் தீபிகா (23). கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஒரு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொறியில் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்த மாணவியைக் கடத்திச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரம், யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இவர்களின் மகள் தீபிகா (23). கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். இரவு தாய் ராஜேஸ்வரியுடன் தீபிகா தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் எழும்பி பார்த்தபோது, தீபிகாவைக் காணவில்லையாம். விசாரித்ததில் இதே தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் முத்துக்கிருஷ்ணன் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள தீபிகா மற்றும் முத்துக்கிருஷ்ணனைத் தேடி வருகிறார்கள்.