முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது

விருதுநகர் அருகே சிவகாசியில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:23 AM

விருதுநகர் அருகே சிவகாசியில் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே துப்பாக்கி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் அசிஸ் மேதா. அவருடைய மகன் அசோக் மேதாவின் பெயரில் துப்பாக்கி உரிம தொழிலை மாற்ற முடிவு செய்தார். கடந்த 19-ம் தேதி அசிஸ் மேதாவின் பெயரில் இருந்த துப்பாக்கி உரிமம் அசோக் மேதாவின் பெயரில் மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.

துப்பாக்கி உரிம அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வெங்கடேசன் துப்பாக்கி உரிம அலுவலரை கைது செய்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.