தற்போதைய செய்திகள்

விருதுநகரில் துப்பாக்கி உரிமம் பெயர் மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் கைது

துப்பாக்கி உரிமத்தை பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளரை கையும் களவுமாக லஞ்சம் ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்ததால்

எஸ். பாண்டியன்

துப்பாக்கி உரிமத்தை பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளரை கையும் களவுமாக லஞ்சம் ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி பகுதியைச் சேர்ந்த அசோக்மேத்தாவின் மகன் அஜிஸ்மேத்தா(35). இவர் மெழுகுவர்த்தி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தையார் பெயரில் உள்ள ரிவால்வர் துப்பாக்கியின் உரிமத்தை, தனது பெயரில் மாற்றம் செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் துப்பாக்கி உரிமம் புதுப்பிக்கும் பிரிவில் கடந்த மாதம் 19-ம் தேதி விண்ணப்பம் அளித்தாராம். அதற்கு அப்பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் சதீஸ்(35) துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து பெயர் மாற்றம் செய்து தர ரூ.15 ஆயிரம் கேட்டாராம். இதையடுத்து பணம் கொடுக்காத காரணத்தால் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மீண்டும் வந்து பார்க்கும் போதும் அதே தொகையை கேட்டாராம். எனவே வியாழக்கிழமை கொண்டு வருவதாக தெரிவித்தாராம்.

இதற்கிடையே விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரனிடம் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் பிற்பகல் 12.30 மணிக்கு அஜிஸ்குமார், ஆட்சியர் வளாகத்தில் இ பிரிவு அலுவலர் தினேஷிடம் கொடுத்தாராம்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி வெங்கடேஸ்வரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜயகாண்டீபன் உள்ளிட்ட போலீஸார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 15 எண்ணம் கொண்ட ஆயிரம் ரூபாய் தாள்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரி்த்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT