வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தினமணி டாட் காம் வாசர்களுக்கு வணக்கம். கடந்த சில வாரங்களாக, தினமணி செய்தித் தளத்துக்குத் தொடர்ந்து வருபவர்கள் கவனித்திருக்கலாம். ஹோம்பேஜ் மற்றும் சில பிரிவுகளில் மாற்றங்களும், ஜங்ஷன் போன்ற பல புதிய பகுதிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தினமணி டாட் காம் வாசகர்ளுக்கு வணக்கம். கடந்த சில வாரங்களாக, தினமணி செய்தித் தளத்துக்குத் தொடர்ந்து வருபவர்கள் கவனித்திருக்கலாம். ஹோம்பேஜ் மற்றும் சில பிரிவுகளில் மாற்றங்களும், ஜங்ஷன் போன்ற பல புதிய பகுதிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களும் புதிய பகுதிகளும் தினமணி டாட் காம் வாசகர்களுக்குத் திருப்திகரமாக இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். திருப்தியாக இருக்கிறது என்றால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடரவும், இல்லை, சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று தங்களது கருத்துகளை வாசகர்கள் தெரிவிக்கும்பட்சத்தில், அந்தக் கருத்துகளைப் பரிசீலித்து உரிய மாற்றங்களைச் செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு என்ற ஆபிரஹாம் லிங்கனின் வாசகத்துக்கு ஏற்ப, வாசகர்களால், வாசகர்களுக்காக, வாசகர்களைக் கொண்டு என்ற ரீதியில், வாசகர்களை அதாவது வாசகர்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுக்க நிர்வாகம் விரும்புகிறது. அத்துடன் வாசகர்களுக்காக பிரத்யேகப் பிரிவுகளும் தொடங்க இருக்கிறோம்.
Advertisement
இவை தொடர்பான உங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் கீழே உள்ள கமென்ட் பாக்ஸ் மூலமே தெரியப்படுத்தவும். நன்றி.