விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீர்களின் சிறார்கள் உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு
தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரர்கள், அவில்தார் பதவியில் உள்ளவர்களின் வாரிசுகளிடம் இருந்து கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரர்கள், அவில்தார் பதவியில் உள்ளவர்களின் வாரிசுகளிடம் இருந்து கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுதில்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் விருப்புரிமை நிதியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவில்தார் மற்றும் முன்னாள் படைவீரர்களின் தொழிற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்து வரும் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு பேருக்கு வழங்கப்படுகறது. இதில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் ரூ.500, 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் ரூ.800, 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் ரூ.1000, 11 முதல் 12-வது வகுப்பு வரையில் ரூ.1500ம் ஒவ்வொரு ஆண்டும் புத்தக படியாக வழங்கப்படுகிறது.
அதேபோல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்விக்கு ரூ.10 ஆயிரம், பாலிடெக்னிக் கல்விவிக்கு ரூ.7500, பட்டப்படிப்புக்கு ரூ.2 ஆயிரமும், பட்ட மேற்படிப்புக்கு ரூ.2500, விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் என ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கிறது. எனவே நிகழாண்டுக்கான கல்வி உதவி தொகைக்கான விண்ணப்பம் விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. அதை பூர்த்தி செய்து வருகிற நவ.15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.