விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து விருதுநகர் கோட்ட செயற்பொறியாளர் தி.திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கூட்டம், விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் விநியோகம் தொடர்பான குறைகளை நேரிலோ அல்லது மனு மூலமாகவோ அளிக்கலாம். இதில், மின் நுகர்வோர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.