முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ: கோப்புகள் சேதம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்து சேதமாகின.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்து சேதமாகின.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், கல்லூரிக்கான மருத்துவமனையும் தனித்தனி வளாகங்களாக பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் செயல்பட்டு வருகிறது. இதில் கல்லூரி வளாகத்தில் வகுப்பறைகள், நிர்வாகக் கட்டடம்,  ஆய்வகங்கள உள்ளிட்டவை உள்ளன. முதல் தளத்தில் செயல்படும் நிர்வாக அலுவலக கட்டடத்தில் பூட்டி இருந்த ஒரு ஆவணங்கள் அறையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகலில் கரும்புகை வெளியேறியதாம். இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் அப் பகுதியில் திரண்டனர். அப்போது அறையை திறந்து பார்த்தபோது அதிகளவில் புகை இருந்ததாம்.

தகவலறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் இரா.ஜெகதீஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அறையில் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் சில கோப்புகள் சேதமடைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →