தற்போதைய செய்திகள்

மேகி நூடுல்ஸை எரித்து போராட்டம்:பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள ரிலையன்ஸ் மார்ட் முன்பு திங்கள்கிழமை மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது

சி.சண்முகவேல்

திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள ரிலையன்ஸ் மார்ட் முன்பு திங்கள்கிழமை மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேகி நூடுல்சில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி தமிழகம் உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ்ளை விற்பனை தடை விதித்தது. இதைத்தொடர்ந்து மேகி நூடுல்ஸ் விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியமங்கலம் ரிலையன்ஸ் மார்ட் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி மாவட்டத் தலைவி நிர்மலா தலைமையில் திரண்ட 26 பேர்,மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் அரியமங்கலம் போலீஸார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT