விராலிமலையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரர் கைது
விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியில் திங்கள்கிழமை 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரரை போலீஸார் கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியில் திங்கள்கிழமை 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெட்டிக்கடைகாரரை போலீஸார் கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் இளையராஜா(எ) வணங்காமுடி, பெட்டிக்கடை நடத்தி வருகிறார், இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஜீன், 15) மாலை பெட்டிக்கடைக்கு திண்பண்டம் வாங்க வந்த 8 வயது சிறுமியை தன் கடைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து தெரியவந்ததும் அச்சிறுமியின் பெற்றோர் விராலிமலை காவல் நிலையைத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து. இளையராஜா(எ) வணங்காமுடி மீது கற்பழிப்பு வழக்கு பதிவுசெய்து, அவரை போலீஸர் கைது செய்தனர்.