முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே வெடிபொருள்கள் வைத்திருந்ததாக 2 பேர் கைது

விருதுநகர் அருகே அனுமதியின்றி கல்குவாரியில்  வெடிபொருள்கள் வைத்திருந்ததாக மேலாளர் உள்பட 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:18 AM

விருதுநகர் அருகே அனுமதியின்றி கல்குவாரியில்  வெடிபொருள்கள் வைத்திருந்ததாக மேலாளர் உள்பட 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே மேலக்கட்டனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அதிகாலையில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, அந்த குவாரியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் வைத்திருந்தது ஆய்வில் தெரியவந்தது.  அதையடுத்து, அங்கிருந்து 51 டெட்டனேட்டார், 10 ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த கல்குவாரி மேலாளர் விவேகானந்தன், வெடி வைப்பவர் வேல்முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.