திருச்சி விமான நிலையத்தில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து கட்ததி வரபபட்ட அரை கிலோ மதிப்புள்ள தஙகத்தை திருச்சி விமானநிலைய சங்க்துறையினர் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து கட்ததி வரபபட்ட அரை கிலோ மதிப்புள்ள தஙகத்தை திருச்சி விமானநிலைய சங்க்துறையினர் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
துபை-திருச்சி இடையே தினசரி இயக்கப்படுவது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம். இந்த விமானம் புதன்கிழமை இரவு 12.05 மணிக்கு திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மு. முகமதுயாசர் (27) என்ற நபர் தனது உடைமைகளுக்குள் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.