முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளம்: அணைகளின் நீர்மட்டம் உயர்கிறது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேர்வலாறு, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேர்வலாறு, அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-44, பாபநாசம் கீழ் அணை-23, சேர்வலாறு அணை-15, மணிமுத்தாறு அணை-1.4, ராமநதி அணை-8, கருப்பாநதி அணை-40, குண்டாறு அணை-22, அடவிநயினார் அணை-13, கொடுமுடியாறு அணை-15, தென்காசி-11.3, ஆய்க்குடி-10.2, செங்கோட்டை-27.

2,000 கனஅடி நீர்வரத்து: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,996 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,376 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,240 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 73 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 181 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 71 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 182 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

உயர்ந்து வரும் நீர்மட்டம்: நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 71.05 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 79.07 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 84.50 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 55.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 50 அடியாகவும் இருந்தது.

இதேபோல், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 4.59 அடி உயர்ந்து 61.68 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 1.60 அடி உயர்ந்து 17.70 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 65 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 28.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.59 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 44.50 அடியாகவும் இருந்தது.

2 ஆவது நாளாக வெள்ளம்: தொடர்ந்து பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.
வெள்ளிக்கிழமை பகலில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீ்ர்படிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாகவும், அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →