பண்ருட்டி அருகே இரு அரசு பேருந்துகள் உரசி கொண்டதில் இருவர் பலி
பண்ருட்டி அருகே இரு அரசுப் பேருந்துகள் உரசிக் கொண்டதில் செவிலியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
பண்ருட்டி அருகே இரு அரசுப் பேருந்துகள் உரசிக் கொண்டதில் செவிலியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் சென்றிக்கொண்டிருந்த அரசு பேருந்தும், சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்து அரசு பேருந்தும் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை அயில்மில் அருகே உரசிக் கொண்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மகாலட்சுமி(29), சூரக்குப்பத்தை சேர்ந்த தனம் (50) இருவரும் பேருந்தின் வெளிப்பகுதியில் இருந்த கம்பி குத்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பண்ருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.