ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து மாணவர் தப்பி ஓட்டம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கி படிக்க, குழந்தைகள் நலக் குழு ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர் இங்கிருந்து தப்பி
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து மாணவர் தப்பி ஓட்டம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கி படிக்க, குழந்தைகள் நலக் குழு ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர் இங்கிருந்து தப்பி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கி படிக்க, குழந்தைகள் நலக் குழு ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர் இங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி, பூஞ்சம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சரவணன் (15). இவர் குற்றச் செயலில் ஈடுபட்டதால், மதுரை குழந்தைகள் நலக்குழு ஆணையம், இவர் 18 வயது பூர்த்தியடையும் வரை, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மல்லிபுத்தூரில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்க உத்தரவிட்டது. இதன்படி 19.2.15-ம் தேதி இவர் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் தனசேகரபாண்டியன் மல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை தேடி வருகிறார்கள்.