முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து-லாரி மோதல்: இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டதில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சம்பவ

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து-லாரி மோதல்: இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டதில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சம்பவ

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டதில் இரு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடிக்கடி விபத்து நடக்கும் இந்த இடத்தில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த இப் பகுதி மக்கள் மற்றும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து குமுளி நோக்கி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் திருச்சியிலிருந்து சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்றி கேரளா மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி எல்லைக்குள், ஜி.எம்.நகர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம், வி.கே.புதூர், ஊத்துமலை காளிச்சாமி மகள் கங்கா (12), வண்டிபெரியார் எஸ்டேட்டைச் சேர்ந்த தம்பி (70), மூணாறு-மாட்டுப்பட்டி எஸ்ட்டேட்டைச் சேர்ந்த முனீஸ்வரபாண்டி மகன் சஞ்சய் (8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சஞ்சயின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமியுடன் இவர் பயணம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் வரும் பிறந்தநாளுக்கு பெரிய கேக் செய்ய வேண்டும் என்று சஞ்சய் கூறியதாக தாய் கூறி அழுதது பெரும் சோகமாக இருந்தது.

காயமுற்றோர்: வி.கே.புதூர் ஊத்துமலை காளிச்சாமி, உத்தமபாளையம் பா.ரமேஷ் (27), ராஜபாளையம் ராஜாகோட்டை தெரு பா.ராஜலட்சுமி (40), திருநெல்வேலி பேட்டை தியாகராஜன் (74), சங்கரன்கோவில் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனியம்மாள் (47), உத்தமபாளையம் ஆனைமலையன்பட்டி மு.விஜயா (31), வண்டிப்பெரியார் பா.மணிமாறன் (55), சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி செ.மதுகுமார் (18), தளவாய்புரம் புனல்வேலி பாலகிருஷ்ணன் (49) ஆகியோர் பலத்த காயமுற்று மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து நடைபெற்ற இடத்தினை ஒட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியின் அலுவலகம் உள்ளது. சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவனையில்  அனுமதித்து உடனடி சிகிச்சைக்கைக்கு நடவடிக்கை எடுத்தார். பின்னர் அவர் கூறுகையில், இதே இடத்தில் வாரத்திற்கு இரு விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நகர் எல்லைக்குள் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. மேலும் இந்த இடத்தில் சாலை வளைவில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சு.மணிகண்டன் (45) கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →