முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் டெயிலருக்கு அரிவாள் வெட்டு

பண்ருட்டி விழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் 43, டெயிலர் தொழில் செய்து வருகிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

பண்ருட்டி விழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் 43, டெயிலர் தொழில் செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பழனி என்பவரின் மகன் சீனிவாசன் என்பருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வீட்டு மனை தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இன்று காலை 4 மணியளவில் ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவியை பார்ப்பதற்காக வெளியே வந்தார். அப்போது திமுக பிரமுகரான சீனிவாசன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் அலறியபடி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி அரசு மருத்துவனையில் கொண்டுச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி தலைமை காவலர் முருகேசன், விசாரணை மேற்கொண்டு தப்பிச்சென்ற சீனிவாசனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →