விருதுநகரில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து விருதுநகர் தெற்கு,
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்ட மசோதாவைக் கண்டித்து விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு முன்னிலை வகித்தார். இதில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேசுகையில், தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் தவறுகள் நடக்கிறது. அமைச்சர் ஒருவர் வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவரை தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு சிபிஐ விசாரணை கேட்டுள்ளனர். இதுபோன்ற பல்வேறு தவறுகள் நடந்து வருவதாகவும், அதை பொதுமக்கள் தட்டிக் கேட்பார்கள் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
பின்னர் தலைவரின் உத்தரவுப்படி விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் சட்ட மசோதாவை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மாநில அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குன்னூர் சீனிவாசன், எ.ஆர்.ஆர்.சீனிவாசன், தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாஅருண்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement