தற்போதைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

ராஜபாளையம் பகுதியில் அனுமதியின்றி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தியதாக இளைஞரை குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் பகுதியில் அனுமதியின்றி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தியதாக இளைஞரை குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், தெற்கு தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த கொடிமாடன் என்பவரின் மகன் முருகன்(35). இவர் சாஸ்தா கோயில் அணை பகுதி மற்றும் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தியதாக சேத்தூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT