முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் தீகுளிக்க முயற்சி

கடலூரில் நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஒருவர் தீகுளிக்க முயற்சி செய்ததால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

Updated On : 30 மார்ச், 2015 at 1:20 PM
பகிர்:

கடலூரில் நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஒருவர் தீகுளிக்க முயற்சி செய்ததால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

கடலூர் மாவட்டத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தேவேந்திரன் (31) என்பவர் தனது நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். அவர் கடனை அடித்த பின்னும் கூட நிலத்தை திருப்பித் தர கடன் கொடுத்தவர் மறுத்துவருவதாக புகார் கூறி, தனது நிலத்தை மீட்டு தரும்படி மனு கொடுக்க வந்தார். அப்போது திடீர் என அவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.