விராலிமலையில் கார் மோதி விவசாயி சாவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
விராலிமலை அருகே உள்ள இ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ர. கருப்பண்ணன்(58) விவசாய வேலை செய்து வரும் இவர் சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலை வழியாக விராலிமலை வந்து கொண்டிருந்தார். விராலிமலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்த போது, பின்னால் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார்(இநோவா) இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது, இதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் கார் ஓட்டுநர் திருச்சியைச் சேர்ந்த கு. துரைபாபுவை (41) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.