முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே பல கிராமங்கள் இருளில் மூழ்கின: பொதுமக்கள் பாதிப்பு

ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை இரவு சூராவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை இரவு சூராவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பல்வேறு கிராமங்கள் வியாழக்கிழமை காலை வரை மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின.  அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.  அதனால் விண்ணமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.   விண்ணமங்கலம், கன்னடிகுப்பம், நாச்சார்குப்பம், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், காட்டுக் கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிóல புதன்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.  விண்ணமங்கலம் துணை மின் நிலையத்தை சேர்ந்த மின்சார வாரிய பணியாளர்கள் மழை நேரத்திலும் பல இடங்களுக்கு சென்று பழுதை சரிசெய்ய முயன்றனர்.   மின் கம்பத்தில் மழை நேரத்தில் ஏறியபோது வழுக்கியதாலும், இருட்டாக இருந்ததாலும் அவர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை.  அதனால் இரவு முழுவதும் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தன.

வியாழக்கிழமை காலையிலேயே மின்சார வாரிய பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டனர்.  பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பழுதை கண்டுபிடித்து சரிசெய்தனர்.   பிறகு மின்தடை நீங்கியது.

இதுகுறித்து விண்ணமங்கலம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியது,  மழை நேரமாக இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் மின் பழுதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை.  ஆனால் வியாழக்கிழமை காலையிலேயே விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.