காடாம்புலியூர் - உழுந்தூர் பேட்டை சாலையில் பொதுமக்கள் போராட்டம்
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டானி குப்பம் கிராம மக்கள் 100 பேர்
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டானி குப்பம் கிராம மக்கள் 100 பேர் காடாம்புலியூர் - உழுந்தூர் பேட்டை செல்லும் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலீயுர் ஊடாட்சி மன்ற தலைவர் ஜெயராணி ரவிச்சந்திரன் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் வெள்ள நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அரை மணி நேர அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.