தற்போதைய செய்திகள்

பாலாற்றில் மணல் கடத்திய 11 பேர் கைது

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்திய 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராஜவேல்

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்திய 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகறல் போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. இந்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது பாலாற்றில் இருந்து 11 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குருவிமலையைச் சேர்ந்த உதயன் (33), வெங்கடேசன் (35), காலூரை சேர்ந்த பாஸ்கர் (33), ஆனந்தன் (35), கிருஷ்ணன் (50), மகேந்திரன் (45), நாராயணன் (40), கண்ணன் (40), குமார் (53), ஆறுமுகம் (42), ராஜகுமார் (35) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

11 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை: புதிய செயலி மூலம் குறைந்த காத்திருப்பு நேரம்

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு ஆளுநா் குற்றச்சாட்டு: அமைச்சா்கள் பதில்

SCROLL FOR NEXT