காரைக்கால் அருகே மதுக்கடையில் நடந்த தகராறில் குடிக்க வந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
காரைக்கால் அருகே பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள ஒரு சாராயக்கடையில் சனிக்கிழமை இரவு மேலகாசாக்குடி பகுதி தென்பாதியை சேர்ந்த சந்திரமோகன் (48) என்பவர் சாராயம் குடிக்க வந்துள்ளார்.
நாகை மாவட்டம் தேவூரை சேர்ந்த புண்ணியமூர்த்தி (55) என்பவர் பாட்டில் எடுக்கும் பணியில் இக்கடையில் வேலை செய்துவருகிறார். சாராயம் குடித்தவர்கள் இடத்தில் கிடந்த பாட்டிலை எடுத்துக்கொண்டிருக்கும்போது, சந்திரமோகனுக்கும், புண்ணியமூர்த்திக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை கடையில் உள்ள மற்ற பணியாளர்கள் தடுத்து சமரசம் செய்துள்ளனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் விறகு கட்டையை எடுத்துவந்து சந்திரமோகனை புண்ணியமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சந்திரமோகனை, கடை நிர்வாகத்தினர் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்தபோது, இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த சந்திரமோகனுக்கு மனைவி, 2 மகள், 1 மகன் உள்ளனர்.
இதுகுறித்து புகாரின்பேரில் காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸôர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.