தலைமைச் செயலகத்தில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி அரசு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் லஞச ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் லஞச ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு உத்தரவின்படி நாடு முழுவதும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
தலைமைச்செயலரும், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவருமான மனோஜ் பரிதா தலைமையில் தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அரசு செயலர்கள் ராகேஷ்சந்திரா, முத்தம்மா, சந்த்ரேகர் பர்தி, ஜோக்கீம் அங்கு, மிகிர்வரதன் உள்பட பலர் பங்கேற்றனர்.